Wednesday 26 December 2018

சூரர்கள்

அவர்கள் இருவருக்கும் அபாயகரமான வேலைகள் தினமும் தரப்படுகின்றன.
கணநேரத்தில் மலை உச்சிக்கு ஏறுவது
ஆயிரம் கிலோமீட்டரை அரை வினாடியில் கடப்பது
உத்திரத்தில் தலைகீழாக நடப்பது
நெருப்பில் சீறிப்பாய்வது.
அவர்கள் தங்களை போன்றே இருக்கும் பெரிய உருவங்களை கண்டு பரிதாபப்பட்டதுண்டு
ஏனோ அவர்களுக்கு இவ்வனைத்து சக்திகளும் கைவந்ததில்லை.
அவன் பிஞ்சு கைகளில் இருக்கும் வரை எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நாங்கள் ஏதும் செய்யலாம் ஆனால் அவன் இஷ்டப்படி மட்டுமே.

No comments:

Post a Comment