குழந்தைகள் ஆச்சரியத்தை
கைவிடுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் நான் அவ்வளவு
பெரிய குழந்தைகளை பார்த்தது இல்லை.
அன்று எங்களூரில்
பனிப்பொழிவு இரவு பகல் பாராது அந்த குழந்தைகள் தங்கள் பல்லாயிரம் கைகளை விரித்தபடி
பனி வாங்கிக்கொண்டிருந்தன.
எவையும் சிலிர்த்து
பனியை விலக்கிக்கொள்வதே இல்லை சோர்ந்து போவதும் இல்லை
இரவுகளில் அங்கு
முயல் குஞ்சுகள் வருவதுண்டு பனியுடன் குழந்தைகளியயும் விழுங்கிவிடுகின்றன
ஆனால் மீண்டும்
குழந்தைகள் பிறந்து கொண்டே இருக்கும் பனி வாங்க தயாராய்
No comments:
Post a Comment