இப்போதெல்லாம் அவள் அடிக்கடி வருகிறாள்
கூடே மெத்தையில் கிடக்கிறாள் , அவளின் கால் என்கால்களுக்கடியில் புதையுண்டு கிடக்கின்றது
என் முகத்தின் முன் வந்து பெருமூச்சு விடுகிறாள் என் தாடி சிலிர்க்கின்றது.
நான் இருக்கும் போதே உடைகள் மாறுகின்றன.
களிப்பறை கதவுகள் மூடப்படுவதே இல்லை.
ஆனால் அவள் என்னிடம் பேசி நான் பார்த்ததே இல்லை
நான் அவளுடன் அவள் என்றோ மறந்த ஒரு பழைய தேவையா இல்லையா என்று தெரியாத ஒரு பொருள்
போல இருந்தேன்
இப்போதுதான் ஞயாபகம் வருகிறது அவளின் நீள மூக்கின் கீழ் மேல் உதட்டின் சற்று மேலே மீசை கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்து விட்டது என்றாவது அவள் என்னை தேடிக்கண்டுபிடித்தால் சொல்லாம்
அது அழகாகவே இருந்தது என்று.
No comments:
Post a Comment