Sunday 24 November 2019

ஒரு குறிப்பு

ஒருவிதத்தில் பாரத்தால் இருவருமே ஒரே வழியில் பயணிக்க அனுப்பப்படடவர்கள்.
இருவருமே விசுவாசிகள். இருவருமே உடலை மையப்படுத்தி தன் வாழ்க்கையை நடத்த நினைத்தாலும் உடலைத்தாண்டிய ஒன்றை அவனிடம் கண்டுகொண்டிருக்கலாம் அது அவர்களை துணுக்குறசெய்திருக்கலாம்.ஒருவன் குழந்தையின் ராஜ்ஜித்தை கொண்டுவரநினைத்தான். இன்னொருத்தன் குழந்தையாகவே மாற நினைத்தானோ என்னவோ. இன்னும் கொஞ்சம் துருவிப்பார்த்தால் மஞ்சள் சூரியன் அவனை ஏற்கனவே குழந்தையாக்கிருந்தது. ஆனால் இன்னொருத்தனுக்கு காத்திருந்தது வெண்நிற  இரவுகள் அந்த காதல் அவனை குழத்தையாக்கியது அவன் அதனை கனவு மட்டுமே கண்டான் என்பது இன்னும் வருத்தத்துக்குரிய செய்தி.சொல்லப்போனால் இருவருமே சபிக்கப்படட வாழ்வை சந்தோசத்துடன் ஏற்றுக்கொண்டவர்கள். நாம் சபிக்கப்படடவர்கள் என்பதை முழுதுமாய் உணர்ந்து அதன் மூலம் தன்னை பெருமை படுத்திக்கொண்டவன் என்று ஏனக்கு வெண்ணிற இரவுகளில் நடமாடியவை நினைக்க தோன்றும் ஆம் அவன் திமிர் பிடித்தவன்.

ஆனால் மஞ்சள் சூரியனோ அவனை சிந்திக்கவே  விடாமல் கழுத்து வளைத்தும் உற்றுநோக்கும் ஒரு சிறு குழந்தையை இல்லை அதன் கையில் இருக்கும் சூரியகாந்தியை போல் ஆக்கியது எனக்கென்னவோ இவனே எலும்பும் தோலுமாய் தொங்கும் நம் நண்பனின் கால்களை சிலுவையை யில் இருக்கும் போதே தாங்க இன்னும் தகுதியானவன்.