Saturday 26 October 2019

குருதிப்பால்

ஓ வானத்து மழை மேகங்களே என் குழந்தையின் அழுகுரல் கேட்கிறதா.
ஓ மரங்களில் ஆடும் பறவைகளே என் குழந்தையின் கிறீச்சிடல் கேட்கிறதா
ஓ ஆழத்து மண் உயிர்களே என் குழந்தையின் பாதத்தடம் தெரிகிறதா.
கடவுள்களின் தொகையே கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.
என் அன்னையின் குருதிப்பால் மூடி நீங்கள் காணாமல் போய்விடுவீர்கள்.

தயவு செய்து எங்குழந்தையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
கால்களில் விழுகிறேன்.

Tuesday 22 October 2019

முப்பரிமாணம்

கனரக வாகன சாலையின் சப்தத்தில் நான் சப்தமில்லாமல் நடந்திருந்தேன். வழிக்காட்டி பலகைகள் இல்லா சாலையில் வாகனங்கள் வழி தெரியாமல் விழி பிதுங்கி சுற்றிக்கொண்டிருந்தன.
நான் வெறித்து அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
காலம் எனை பிடித்து தள்ளியது.
ஆறு பக்கம் கண்ணாடியுடைய அறையினுள் , நான் கண்டடைகிறேன் எனை எங்களை அவளால்.

Friday 18 October 2019

கதை

அந்த தூய மிருகம் உங்கள் காதுகளை நக்கிக்கொஞ்சி பின் நடக்கும் போது அதன் வால் பிடித்து பின்சென்று விடுங்கள்.
அவை அழைத்துச்செல்லும் காடு நீங்கள் ஊகிக்க முடியாத துக்கம் மறுக்க முடியாத மகிழ்ச்சி தவிர்க்க முடியாத தனிமை கொண்டது.
ஆனால் அதுவே நாம் என்றும் கனவுகளில் கடவுளர்களிடம் வேண்டுவது. சென்றுவிடுங்கள் நண்பர்களெ எப்பொழுதும் அவை வாலாட்டி நம்முன் வருவதில்லை.