Sunday 13 September 2020

பறவையில்லை

மலைகள் சிறுத்து குறுகி நின்றன

நான் மேலே பறக்கையில்

நதிகள் வெருண்டு தன் கோட்டு நீருக்குள் ஒளிந்தன

நான் மேலே பறக்கையில்

சிதறிய பொம்மைகளேன கட்டிடங்கள் ஆவென்றன

நான் மேலே பறக்கையில்

ஆனால் தரையிறங்கி வந்தாகவேண்டும்

இறக்கைகள் சுருக்காமல்

மெங்காலடியெடுத்து வைக்காமல்

இறங்கி நிற்கையில் முன்புபோல் அவையில்லை

தற்பொழுது என் தலைக்குமேல் பறக்கும் குருவிக்கு மட்டுமே தெரியும்

அவற்றின் என்றுமுள உருவம்

நமக்கு வாய்த்தது இவ்வளவுதான்

பாவம் நான் பறவையில்லையே!

No comments:

Post a Comment