Tuesday 8 January 2019

காதுகள்


அன்றொரு நாள் அவள் குட்டிப்பாவாடையை தூக்கிப்பிடித்துக்கொண்டு மென் மழைச்சாரலின் சாயல் எடுத்துக்கொண்டிருந்தாள். புற்களின் நுனிகள் மேகத்திற்கு போட்டியாக பெய்தமழையை திரும்பதர காத்திருந்தன. புற்களின் நடுவில் நீண்ட கட்டிப்புல் போல எட்டிப்பார்த்தன இரு காதுகள். அது அவளைப்பார்த்தது அவளும் அதைபார்த்துவிட்டாள். கணநேரத்தில் பூமியில் இருந்து ஆகாயத்திற்கு சென்று மீண்டும் வந்து சேர்ந்தாள். மழைவிழுங்கிக்கொண்டிருந்த அது அந்த பூகம்பத்தால் பயந்து அழுது உருண்டோடியது. அவள் முதலில் சிரித்தாலும் பின்பு அழுதாள். சிலுவையின் முன் மண்டியிட்டு மன்றாடினாள். கனவில் அந்த காது உருவத்தின் குடும்பம் தன் அம்மாவிடம் சொல்லி சண்டையிட்டனர் அந்த குட்டி காதுகளில் அடிபட்டிருந்தது. திரும்ப அவள் அந்த மின்விளக்கு கம்பத்தின் அருகில் செல்கையில் தன் ஐந்து வயது அண்ணனை அழைத்துச்செல்வதற்கு மறப்பதில்லை. அண்ணனும் ஒரு கைபார்த்து விடலாம் என்று சட்டைக்கையை மடக்கி விட்டுக்கொண்டான்.

No comments:

Post a Comment