Tuesday 8 January 2019

அழுகிய பழங்கள்

மூக்கொழுகும் அழுகிய பழங்களை கண்டதுண்டா
அவை தேவையற்றவை என்று தெருவில் தூக்கியெறியப்பட்டவை
தோல் சுருங்கி பாதி காற்று போக மீதமிருப்பவை
அவை சாப்பாட்டு மேசையின் நடுவே அலங்கரிக்க வைக்கப்படுவதில்லை
சாலையில் அவரவர் கால் பட்டு சிலசமயம் அங்கேயே கூழாகியும்விடுகின்றன
அந்த அழுகல் வாடையின் அருகில் யாரும் உட்காருவதில்லை.
ஆனால் பச்சைப்பழங்களை பார்க்கையில் அதன் கண்கள் எரிவதை நான் பார்த்ததுண்டு ஒரு நாள் பேருந்தினுள் மொத்த பிரபஞ்சமும் புறக்கணித்த போதும் அழுகல்கள் முன்னும் பின்னும் நடந்தவாறே புலம்பிக்கொண்டிருந்தன. வீட்டிற்கு சென்றதும் முதலில் கண்ணாடியின் முன் நின்று முகத்தைப்பார்த்தேன் அழுகத்தொடங்கிய முகத்தில் சற்றே மூக்கு ஒழுகிக்கொண்டிருந்தது.




No comments:

Post a Comment