Wednesday 26 December 2018

சூரர்கள்

அவர்கள் இருவருக்கும் அபாயகரமான வேலைகள் தினமும் தரப்படுகின்றன.
கணநேரத்தில் மலை உச்சிக்கு ஏறுவது
ஆயிரம் கிலோமீட்டரை அரை வினாடியில் கடப்பது
உத்திரத்தில் தலைகீழாக நடப்பது
நெருப்பில் சீறிப்பாய்வது.
அவர்கள் தங்களை போன்றே இருக்கும் பெரிய உருவங்களை கண்டு பரிதாபப்பட்டதுண்டு
ஏனோ அவர்களுக்கு இவ்வனைத்து சக்திகளும் கைவந்ததில்லை.
அவன் பிஞ்சு கைகளில் இருக்கும் வரை எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நாங்கள் ஏதும் செய்யலாம் ஆனால் அவன் இஷ்டப்படி மட்டுமே.

Tuesday 18 December 2018

கனவு போல் : 12/17/2018 : செரொஷாவின் அழுகை


தன் அம்மையின் தலை தன் கண் முன்னே துண்டிக்கப்படுவதை  யாரும் விரும்புவதில்லை. ஆனால் அது அவனுக்கு நேர்ந்தது. அவள் ஒரு பதினாங்கு வயது சிறுவனுடன் ஓடிப்போய் திரும்பியிருந்தாள். செரொஷாவின் அப்பா அவளின் தலையை ஆடு வெட்டும் நீண்டகத்தி ஒன்றால் ஒரே வெட்டில் துண்டாக்கினார். முதலில் அவளை விடாப்பிடியாக அழைத்து வந்து வீட்டின் திண்ணையில் இருந்த மேசை மீது நின்று கொண்டே குனியவைத்து கத்தியை ஓங்கினார். ஒரேயொரு கணம் அவள் கண்கள் செரொஷாவை சந்தித்தது. அவள் அப்பாவிற்கு எந்த எதிப்பும் காட்டவில்லை. அவள் கண்களை செரொஷாவால் அவள் புடதியிலும் காண முடிந்தது அது அவனிடமோ அப்பாவிடமோ எந்த வித பரிதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. எங்கோ இந்த உலகத்திற்கு சம்பந்தம் இல்லாத இரு கண்கள் சாவை மட்டும் விரும்பும் வேறெதையும் நாடாத அந்த கண்களை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அம்மா அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது அவன் தன் முன்னால் இருந்த நிலைக்கண்ணாடியில் தன் மீசை முளைக்காத முகத்தில் அழுத அழுதுகொண்டிருக்கும் சிவந்த கண்களை பார்த்தான். அவளுக்காக அழ அந்த அறையில் அவன் ஒருத்தனே இருந்தான். அவன் அழுததை யாரும் கவனிக்கவில்லை அம்மையும் கவனிக்கவில்லை. ஒரு முறை அவன் நண்பன் தன் அம்மா அழகாக இருப்பதாக கூறியுருந்தான் அதை அவன் பெருமையுடன் நினைத்திருந்தான். தன் நண்பன் அழகாக இருப்பதாக அம்மா கூறியதையும் நினைத்துப்பார்த்தான். நிலைக்கண்ணாடியில் அவன் அழுகை நின்றது துண்டிக்கப்பட்ட தலை திண்ணையில் குதியாட்டம் போட்டது. அவள் உடல் சரிந்தது.டிசர்ட் போல இருந்த ,வெள்ளையும் நீலமும் கோடிட்ட உடுப்பு அவிழ்ந்து அவளின் முலைகளில் பால் சொரிந்தது. செரொஷா மண்டியிட்டு .அதையே
உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

Monday 17 December 2018

வெப்ராளம்


எங்களூரில் பாழடைந்த தேவாலயம் ஒன்று இருந்தது.
மக்கள் இரவு நேரத்தில் அங்கு செல்வதில்லை.
பாதி திறந்த தேவாலயக்கதவு வழி அங்கி சலசலக்க பின்தொடரும் நிழல் போன்ற உருவத்தைக்கண்டு ஜன்னி கண்டவர் பலர்.
அன்றொரு நாள் பெரும் பனி பொழிந்து வானும் மண்ணும் இணைந்து தட்டையானதொரு உலகம் உருவாகியிருந்தது.
கல்லறை தோட்டத்தை தாண்டி நான் நடக்கும் பொழுது அவர்கள் சொன்ன அதே நிழல்  பனிப்பொருக்குகள் சிதற என்னை நோக்கி வந்தது. 
சிக்குபிடித்த தலையும் தாடியும் குழிவிழுந்த மார்புடன் கிழிந்த அங்கியுமாக அவன்  ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைக்காத குறைதான். அழுது தீர்த்தான். அழுகை நின்றதும் நான் கேட்டேன் ஏன் இந்த வெப்ராளம் என்று. எனைப்பார்க்க யாரும் வருவதில்லை எனக்கு பயமாக இருக்கின்றது என்றான்.
நானும் அவனை தோளோடு சேர்த்து அரவணைத்து என் வரவேற்பறையின் வலதுபுறம் சூரியனைப்பார்த்தவாறு வைத்து விட்டேன். பின்புதான் அவனுக்கும் சமாதானம் கிடைத்திருக்கும். 

Sunday 16 December 2018

பெரிய குழந்தைகள்




குழந்தைகள் ஆச்சரியத்தை கைவிடுவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் நான் அவ்வளவு பெரிய குழந்தைகளை பார்த்தது இல்லை.
அன்று எங்களூரில் பனிப்பொழிவு இரவு பகல் பாராது அந்த குழந்தைகள் தங்கள் பல்லாயிரம் கைகளை விரித்தபடி பனி வாங்கிக்கொண்டிருந்தன.
எவையும் சிலிர்த்து பனியை விலக்கிக்கொள்வதே இல்லை சோர்ந்து போவதும் இல்லை
இரவுகளில் அங்கு முயல் குஞ்சுகள் வருவதுண்டு பனியுடன் குழந்தைகளியயும் விழுங்கிவிடுகின்றன
ஆனால் மீண்டும் குழந்தைகள் பிறந்து கொண்டே இருக்கும் பனி வாங்க தயாராய்

Saturday 15 December 2018

கனவு போல : 12/14/2018


ஜன்னலோ கதவோ என்று தெரியாது ஓரளவுக்கு ஞயாபகம் இருப்பது அதுதான் , இல்லை செரி தான் அது கதவுதான் அதன் அருகில் சப்பணங்கால் இட்டு அமர்ந்து வெள்ளை நிற தட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எதனை ? அது கேள்விக்குரியது. சூரியன் மறையும் அந்தி வேளை நான் ஒரு நிக்கரும் அரைக்கை வெள்ளை சட்டையும் அணிந்திருந்தேன். சுற்றிலும் யாரும் இல்லை அது ஒரு சிறிய ஆனால் தூய்மையான் ஆறை. ஆள் உயரத்திற்கு என் வாயிலிரிந்து முடி வந்தது எடுக்க எடுக்க வந்துகொண்டேயிருந்தது ஆனால் அது முடிக்கற்றை அல்ல ஒற்றை முடி.. கடைசியில் அது வந்து தீர்ந்தது. என் இடுப்புக்கு பின்னால் இருபுறமும் தரையில் பெரிய நகங்களுடன் இரு பெரிய கால்கள் தெரிந்தன நான் அதனை பார்ப்பதை தவிர்க்க நினைத்தேன். நான் பார்ப்பது அதற்கு தெரியாமல் பார்த்து விட்டிருந்தேன் இல்லை அவ்வாறு நினைத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என் முதுகு சிலிர்க்க முடிக்கற்றைகள் உரசுவதை உணர்ந்தேன். ஏளனச்சிரிப்புடன் பருத்த முலை அசைய கையில் குழந்தையுடன் அவள் என் முன்னாலேயே வந்துவிட்டாள் என்னால் எழுந்து ஓட முடியவில்லை. வியர்க்க எழுந்து கொண்டதும் நினைத்துக்கொண்டென். நீலியையும் என் அண்ணனையும் ஜெயமோகனையும். வாயின் ஓரம் வழிந்திருந்த  எச்சியை துடைத்துக்கொண்டு மீண்டும் புரண்டு படுத்தேன். அந்த பச்சை கண்கள்!

பேசும் பந்து




காலம் அவன் அக்குளுக்குள் அடங்கிவிட்டது
அந்த மேசையின் மீது இருந்த சக்கரம் அவன் மீது ஏறி இறங்கி கூழாக்கி அவனுக்கே காட்டியது
ஆனால் ஆட்ட மேசையின் அடியில் இருந்த அவன் போன்ற ஒரு உருவம் அவனை மீண்டும் அழைத்து உயிர்பெற்று  எழச்செய்தது. 
சட்டைப்பையில் இருந்த கடைசி கூல்டினும் கிழித்துக்கொண்டு பறந்தோட மீண்டும் சக்கரம் சுழல ஆரம்பித்தது. 
மீண்டும் அதே தற்செயல் எனும் மந்திரப்பாய் விரித்து மேகங்களுக்கு மேலே பறக்கலானான். கோடிக்கு அடுத்த முறையும் புதுக்குழந்தை முலைஅருந்துவது போலவே இருந்தது.
சக்கரத்தின் மையப்புள்ளியில் உட்கார்ந்து பந்தினை உற்று நோக்கும்போது தினமும் குத்தும் அதே ஊசி மூளையில் குத்தியது  "பார்க்கலாம் அது எதன் அடிப்படையில் தான்  சுழல்கிறது" .

Friday 14 December 2018

கிறிஸ்துமஸ் தாத்தா



முன்னொரு நாள் ஏசுவின் சொந்த ஊருக்கு அருகில் ஒரு தாத்தா இருந்திருந்தார்
அவர் ஏசுவை பலமுறை பார்த்து விசாரித்திருப்பதாக கேள்வி
அதன் பின்னொரு நாளில் அவரின் வீட்டு சிம்மினி வழி வானிலிருந்து தேவதூதர்கள் தங்கள் பரிசுகளை இறக்கியிருந்தர்
 அதன் பின் அவர் அங்கிருந்து தூரதேசம் சென்றதாகவும் கேள்வி
அதே தாத்தா அதே தொப்பையுடன் இன்று கை இறுகும் குளிரில் செருப்பொன்றணிந்து 
பஞ்சடைந்த தாடியும் குனிந்த தலையுமாய் மண்டிபோட்டு கைகூப்பி என்னிடம் எதாவது பரிசு இருக்குமா என்று 
நிமிராமலே என்கண்களை பார்த்து கேட்டார்.
நான் கையாட்டி நடந்து வந்துவிட்டிருந்தேன்
ஆனால் அந்த செந்நிற கூம்பு குல்லாவும் இறுதியில் தொங்கும் வெள்ளை பந்தும் அழகாகவே இருந்தது. 

இருட்டுக்களி




அன்றும் இரவு குளிர்ந்தே இருந்தது
உடம்பின் வெப்பம் அனைத்தையும் வாய் மட்டும் வெளிவிட்டுக்கொண்டிருந்தது
பிரபஞ்சமே என் தலைசுற்றிகொண்டிருந்தது
சுற்றிலும் அரவம் இல்லையென்றதும்  முதலில் எனை நிர்வாணமாக்கினேன்
பின்பு எனக்கேயான சுயஇன்பத்தை அன்று இன்னொருமுறை ஆரம்பித்தேன்
முன்னால் கருநீல வானத்தில் யாரோ நமுட்டுச்சிரிப்புடன் உற்றுநோக்குவது தெரிந்தது
நானும் சிரித்துக்கொண்டேன் , அவளுக்கு தெரியாது உச்சந்தலைமேல் ஏறி நிற்பது அவளே என்று



Thursday 13 December 2018

கனவின் மீசை





இப்போதெல்லாம் அவள் அடிக்கடி வருகிறாள்
கூடே மெத்தையில் கிடக்கிறாள் , அவளின் கால் என்கால்களுக்கடியில் புதையுண்டு கிடக்கின்றது
என் முகத்தின் முன் வந்து பெருமூச்சு விடுகிறாள் என் தாடி சிலிர்க்கின்றது.
நான் இருக்கும் போதே உடைகள் மாறுகின்றன.
களிப்பறை கதவுகள் மூடப்படுவதே இல்லை.
ஆனால் அவள் என்னிடம் பேசி நான் பார்த்ததே இல்லை
நான் அவளுடன் அவள் என்றோ மறந்த ஒரு பழைய தேவையா இல்லையா என்று தெரியாத ஒரு பொருள் போல இருந்தேன்
இப்போதுதான் ஞயாபகம் வருகிறது அவளின் நீள மூக்கின் கீழ் மேல் உதட்டின் சற்று மேலே மீசை கொஞ்சம் அதிகமாகவே வளர்ந்து விட்டது என்றாவது அவள் என்னை தேடிக்கண்டுபிடித்தால் சொல்லாம் அது அழகாகவே இருந்தது என்று.

அந்தர ஜாலம்




அண்ட பெருவெளி தன் கருத்த திமிருடன் பார்த்தும் பார்க்காதது போல தலை திருப்பிக்கொண்டது
சாம்பல் நிற மேகங்கள் கழுத்து தூக்கி தலை நீட்டிப்பார்த்தன
கீழே நான் எனக்கேயான சொர்க்கலோகத்தில் தனியனாய் நடந்துகொடிருந்தேன்
அவர்களின் இச்செயலுக்கு அப்போதுதான் அர்த்தம் புரிந்தது
தேவன் தன் இரும்புச்சுத்தியலால் மின்னல்களை வளைத்துப்பிடித்து தூளாக்கிக்கொண்டிருந்தான்
என் மூக்கு நுனி நாயின் வால் மின்கம்பத்தின் உடல் அனைத்தும் மின்னலை தாங்கிப்பிடித்திருந்தன.
ஆனால் சுத்தியல் அடி எங்களுக்கு கேட்டதே இல்லை. அவர்களுக்கு அது மட்டும் கேட்டிருக்கலாம்.
பாவம்தான்.

Sunday 9 December 2018

தாடியை தடவ ஒரு வாய்ப்பு- சக்காரியாவின் யேசு


யாருக்கு தெரியும் : 
கனவுலகில் அவன் வென்னீர் தயாராகிவிட்டது. .அவன் தன் உடல் ஆன்மா முழுவதும் இருக்கும் அந்த ரத்தப்படலத்தை  வென்னீரால் கிழித்து எறிந்து விடலாம் என்று நினைக்கிறான். ஆனால் அவனுள் ஆதிமுதல் இருக்கும் ஒருவன் செதில் செதிலாய் அவனுள் வளர்ந்து வரும் ஒருவன் அதனை வெறுக்கின்றான் ஏனெனில் அவன் மனித குலத்தின் பிரதிம்ஹிதி. அவனேதான் அந்த மனித குமாரன் பிறக்கும் முன்பே அவன் பிரதிநிதி ஆனவனும்.வேசி பாவம் என்றதும் தன்னைதானே என்பது போல கேட்கும் கைவிடப்படட அநாதையா அவன்? ஒரு வேளை தன் மீட்பை நோக்கிதான் அவன் குமாரனை விட்டானோ?
எங்கும் நிறை பரப்பிரம்மம் அவள் , வேசியை ஆன மேரி பின்பு அவளே மேரி மாக்தலீனோ? இறுதியில் அந்த குமாரனிடம் படை வீரனையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் பேரன்னையா? அன்னை சொன்னாலவன் தட்டாமல் கேட்பான் என்றதும் குமாரனின் கைகால்கள் அசைந்தவா ஆம் என்பது போல்? உனக்கு புரியாது அந்த அன்னைகளின் வலி என்றதும் படைவீரனை அவள் குத்தி கொன்றிக்கலாமே? அனால் அவள் பாவம் என்றதும் அவள் மடியைத்தான்  அவன் தேடி ஒடுகிறான்.
கண்ணாடி பார்க்கும் வரை :
சில சமங்களில் கண்ணாடி பார்க்கும் போது அது நான் தானா , நான் தான் இவ்வாறு இருக்கிறேனா இல்லை  வேறு ஒரு உடலில் நான் அடைக்கலம் அடைந்திருக்கின்றேனா? என்பது போன்ற கேள்விகள் என்னை சுற்றும். தன்னுள் இருக்கும் தன்னை தனக்கே காட்டும் ஒரு பருப்பொருள் அது நம் குமாரனின் கையில் கிடைக்கின்றது.சொந்த ஊருக்கு வந்த அவன் தன் எதற்கும் ஆசைப்படும் முகத்தை காண்கிறான் பயப்படுகிறான். உலக இணைப்புகள் அவன் தாடி மீசையை மழிக்க நினைக்கின்றது. ஆனால் அந்த கண்ணாடி இல்லையேல் அவனுக்கு அவனின் முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சலசலப்பூட்டும் நீரோ வளைந்து நெளியும் சீன பீங்கானோ வேண்டாம் சற்றும் புரட்டின்றி தன்னை காட்டும் கண்ணாடி ஆம் அதுதான் அவனுக்கு தேவைப்பட்டது அவனுக்கு தெரியாமலே அவன் விளைந்தது. தாவூல் தன் பெண்ணை அறிமுகப்படுத்துகிறான் அவன் தங்கையின் உருவத்தை நினைவூட்டி.. மரியம் முத்தமிட்டு வரவேற்றாள்.இறுதியில் ஆடியின் வேலை முடிந்தது  , அவன் அழுது புலம்பியபடியே ஆகாயத்தை நோக்க ஆரம்பித்து விட்டான் என்றே நினைக்கிறேன். 
கிறிஸ்துமஸ் தினம்: 
இன்று நாமே பிறக்கா ஒரு நிலைக்கு செல்ல போகிறோம் என்பது தெரியாமல் இருவரும் சுத்திக்கொண்டிருந்தனர். ஒரு வேளை அவளை காணாமல் இருந்திருந்தால் அதெல்லாம் நடந்திருக்காது. அம்மிணி அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு கிடத்தொயிருந்தாள். அவர்களின் பாக்கியம் குமாரன் இருந்த அதெயிடத்தில் அவனின் கால்கை நடுங்கலுடன் தழுவியபடி பூமித்தொட்டிலில் கனவுகளற்ற தூக்கத்தில் அந்த தண்ணீர் சூழ்ந்த அறையில் சற்று முன் உட்புக நினைத்த அறையில் ஏதுமற்றதாய் தூங்கினர். ஆனால் அந்த பாக்கியம் அந்த ஒரு இரவுக்கு மட்டுமே. இந்த விபச்சாரத்தலைவி முதலில் சொனது போல் அல்லாமல் குமாரனையே சுமக்கின்றாள் இன்னும் சொல்லப்போனால்ல் குமாரர்களையே சுமக்கின்றாள். ஆனால் தித்தார்த்தன் அங்கே எதற்காக எல்லாம் கடந்து நதி சென்று சேரும் இடம் அந்த ஒற்றை குடம்தானா?

அன்னம்மாள் :

பொன் துகள்களை வானின் பேழையில் இருந்து அக்காவிற்காக அவன் வரவழைத்திருந்தான். வானம் எல்லைகளின்றி கொட்டிக்கொண்டிருந்தது. அப்போதுதான் வர்க்கீஸ் அன்னம்மாவைப்பார்த்து ஓடியிருக்க வேண்டும். மெலிந்த உடலும் குச்சி கை கால்களும் செடிகளுக்குள் மறைந்திருப்பதை அவ்வளவு சுலபமாக யாரும் கண்டுபிடித்திருக்க முடியாது அவன் அதை பயன்படுத்திக்கொண்டான். அவனால் நாம் சொல்வதையெல்லாம் கேட்டு உம் கொட்ட மட்டுமே முடியும். அதை அவன் தவறாமல் செய்வான் இன்றும் என்றும் அவனுக்கு வேறு சக்திகள் இருந்தது இல்லை இது நகைப்புக்குரியதும்ம் கூட. ஆறு வயது மூத்தவள் அவளை என்றோ காண உரிமையுடன் வந்திருக்கலாம் கட்டி அணைத்திருக்கலாம் அழுது புலம்பிருக்கலாம் கடைசியிலும் கூட ஒரு முத்தத்துடன் அவன் நாலு வார்த்தை பேசவே வந்திருக்கிறான் நசை. அதுவே அதுவே அவனால் முடிந்ததும் அனைவருக்கும் தேவைப்படுவதும். ஒரு வேளை அந்த குச்சி கைகால்கள் என்றுமே நாம் பார்க்க முடியாதபடி நம் கூடவே இருக்கின்றதோ. ஆனால் எப்படியும் அவன் அக்காவைக்காண புதருக்குள் இருந்து வராமல் இருக்க முடியாதல்லவா?

சிலுவை மலை மீது:

அவன் படு பயங்கராமான உச்சியில் நின்றுகொண்டு கைவிரித்து அழைகிறான். அங்கு அவனா இன்றும் எரிந்து கொண்டிருக்கிறான். கைகளில் பொன் மண்டையோடுகளுடன் அவள் அந்த கிழவனை அழைக்கிறாள். அந்த நெற்றிச்சிலுவைகள் கிழவன் ஊர் மக்களுக்கு போட்டதா. அந்த இருவரும் ஆதாமும் ஏவாளுமா , கிழவனை பாம்பின் நாக்கிற்கு தீனிபோட அழத்தனரா?.உச்சிக்கு போவதற்குள் கிழவன் செத்துவிடலாம். ஆனால் அவன் அந்த வானவில்லையும் பார்த்து விடுகிறான். அதுதான் அவனை பீதியடையச்செய்கிறது. அதன் காரணம் அவனுக்கும் எனக்கும் விழங்கவில்லை. ஒன்று மட்டும் புரிகிறது அவன் மேலே சென்றும் எரிந்து கொண்டே இருக்கிறான். அப்படியனால் உச்சிக்கு மேல் ஏதும் இல்லையல்லவா ?