Tuesday 18 December 2018

கனவு போல் : 12/17/2018 : செரொஷாவின் அழுகை


தன் அம்மையின் தலை தன் கண் முன்னே துண்டிக்கப்படுவதை  யாரும் விரும்புவதில்லை. ஆனால் அது அவனுக்கு நேர்ந்தது. அவள் ஒரு பதினாங்கு வயது சிறுவனுடன் ஓடிப்போய் திரும்பியிருந்தாள். செரொஷாவின் அப்பா அவளின் தலையை ஆடு வெட்டும் நீண்டகத்தி ஒன்றால் ஒரே வெட்டில் துண்டாக்கினார். முதலில் அவளை விடாப்பிடியாக அழைத்து வந்து வீட்டின் திண்ணையில் இருந்த மேசை மீது நின்று கொண்டே குனியவைத்து கத்தியை ஓங்கினார். ஒரேயொரு கணம் அவள் கண்கள் செரொஷாவை சந்தித்தது. அவள் அப்பாவிற்கு எந்த எதிப்பும் காட்டவில்லை. அவள் கண்களை செரொஷாவால் அவள் புடதியிலும் காண முடிந்தது அது அவனிடமோ அப்பாவிடமோ எந்த வித பரிதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. எங்கோ இந்த உலகத்திற்கு சம்பந்தம் இல்லாத இரு கண்கள் சாவை மட்டும் விரும்பும் வேறெதையும் நாடாத அந்த கண்களை அவன் பார்த்துக்கொண்டிருந்தான். அம்மா அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது அவன் தன் முன்னால் இருந்த நிலைக்கண்ணாடியில் தன் மீசை முளைக்காத முகத்தில் அழுத அழுதுகொண்டிருக்கும் சிவந்த கண்களை பார்த்தான். அவளுக்காக அழ அந்த அறையில் அவன் ஒருத்தனே இருந்தான். அவன் அழுததை யாரும் கவனிக்கவில்லை அம்மையும் கவனிக்கவில்லை. ஒரு முறை அவன் நண்பன் தன் அம்மா அழகாக இருப்பதாக கூறியுருந்தான் அதை அவன் பெருமையுடன் நினைத்திருந்தான். தன் நண்பன் அழகாக இருப்பதாக அம்மா கூறியதையும் நினைத்துப்பார்த்தான். நிலைக்கண்ணாடியில் அவன் அழுகை நின்றது துண்டிக்கப்பட்ட தலை திண்ணையில் குதியாட்டம் போட்டது. அவள் உடல் சரிந்தது.டிசர்ட் போல இருந்த ,வெள்ளையும் நீலமும் கோடிட்ட உடுப்பு அவிழ்ந்து அவளின் முலைகளில் பால் சொரிந்தது. செரொஷா மண்டியிட்டு .அதையே
உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment