Sunday 9 December 2018

தாடியை தடவ ஒரு வாய்ப்பு- சக்காரியாவின் யேசு


யாருக்கு தெரியும் : 
கனவுலகில் அவன் வென்னீர் தயாராகிவிட்டது. .அவன் தன் உடல் ஆன்மா முழுவதும் இருக்கும் அந்த ரத்தப்படலத்தை  வென்னீரால் கிழித்து எறிந்து விடலாம் என்று நினைக்கிறான். ஆனால் அவனுள் ஆதிமுதல் இருக்கும் ஒருவன் செதில் செதிலாய் அவனுள் வளர்ந்து வரும் ஒருவன் அதனை வெறுக்கின்றான் ஏனெனில் அவன் மனித குலத்தின் பிரதிம்ஹிதி. அவனேதான் அந்த மனித குமாரன் பிறக்கும் முன்பே அவன் பிரதிநிதி ஆனவனும்.வேசி பாவம் என்றதும் தன்னைதானே என்பது போல கேட்கும் கைவிடப்படட அநாதையா அவன்? ஒரு வேளை தன் மீட்பை நோக்கிதான் அவன் குமாரனை விட்டானோ?
எங்கும் நிறை பரப்பிரம்மம் அவள் , வேசியை ஆன மேரி பின்பு அவளே மேரி மாக்தலீனோ? இறுதியில் அந்த குமாரனிடம் படை வீரனையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் பேரன்னையா? அன்னை சொன்னாலவன் தட்டாமல் கேட்பான் என்றதும் குமாரனின் கைகால்கள் அசைந்தவா ஆம் என்பது போல்? உனக்கு புரியாது அந்த அன்னைகளின் வலி என்றதும் படைவீரனை அவள் குத்தி கொன்றிக்கலாமே? அனால் அவள் பாவம் என்றதும் அவள் மடியைத்தான்  அவன் தேடி ஒடுகிறான்.
கண்ணாடி பார்க்கும் வரை :
சில சமங்களில் கண்ணாடி பார்க்கும் போது அது நான் தானா , நான் தான் இவ்வாறு இருக்கிறேனா இல்லை  வேறு ஒரு உடலில் நான் அடைக்கலம் அடைந்திருக்கின்றேனா? என்பது போன்ற கேள்விகள் என்னை சுற்றும். தன்னுள் இருக்கும் தன்னை தனக்கே காட்டும் ஒரு பருப்பொருள் அது நம் குமாரனின் கையில் கிடைக்கின்றது.சொந்த ஊருக்கு வந்த அவன் தன் எதற்கும் ஆசைப்படும் முகத்தை காண்கிறான் பயப்படுகிறான். உலக இணைப்புகள் அவன் தாடி மீசையை மழிக்க நினைக்கின்றது. ஆனால் அந்த கண்ணாடி இல்லையேல் அவனுக்கு அவனின் முகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சலசலப்பூட்டும் நீரோ வளைந்து நெளியும் சீன பீங்கானோ வேண்டாம் சற்றும் புரட்டின்றி தன்னை காட்டும் கண்ணாடி ஆம் அதுதான் அவனுக்கு தேவைப்பட்டது அவனுக்கு தெரியாமலே அவன் விளைந்தது. தாவூல் தன் பெண்ணை அறிமுகப்படுத்துகிறான் அவன் தங்கையின் உருவத்தை நினைவூட்டி.. மரியம் முத்தமிட்டு வரவேற்றாள்.இறுதியில் ஆடியின் வேலை முடிந்தது  , அவன் அழுது புலம்பியபடியே ஆகாயத்தை நோக்க ஆரம்பித்து விட்டான் என்றே நினைக்கிறேன். 
கிறிஸ்துமஸ் தினம்: 
இன்று நாமே பிறக்கா ஒரு நிலைக்கு செல்ல போகிறோம் என்பது தெரியாமல் இருவரும் சுத்திக்கொண்டிருந்தனர். ஒரு வேளை அவளை காணாமல் இருந்திருந்தால் அதெல்லாம் நடந்திருக்காது. அம்மிணி அவர்களின் நெற்றியில் முத்தமிட்டு கிடத்தொயிருந்தாள். அவர்களின் பாக்கியம் குமாரன் இருந்த அதெயிடத்தில் அவனின் கால்கை நடுங்கலுடன் தழுவியபடி பூமித்தொட்டிலில் கனவுகளற்ற தூக்கத்தில் அந்த தண்ணீர் சூழ்ந்த அறையில் சற்று முன் உட்புக நினைத்த அறையில் ஏதுமற்றதாய் தூங்கினர். ஆனால் அந்த பாக்கியம் அந்த ஒரு இரவுக்கு மட்டுமே. இந்த விபச்சாரத்தலைவி முதலில் சொனது போல் அல்லாமல் குமாரனையே சுமக்கின்றாள் இன்னும் சொல்லப்போனால்ல் குமாரர்களையே சுமக்கின்றாள். ஆனால் தித்தார்த்தன் அங்கே எதற்காக எல்லாம் கடந்து நதி சென்று சேரும் இடம் அந்த ஒற்றை குடம்தானா?

அன்னம்மாள் :

பொன் துகள்களை வானின் பேழையில் இருந்து அக்காவிற்காக அவன் வரவழைத்திருந்தான். வானம் எல்லைகளின்றி கொட்டிக்கொண்டிருந்தது. அப்போதுதான் வர்க்கீஸ் அன்னம்மாவைப்பார்த்து ஓடியிருக்க வேண்டும். மெலிந்த உடலும் குச்சி கை கால்களும் செடிகளுக்குள் மறைந்திருப்பதை அவ்வளவு சுலபமாக யாரும் கண்டுபிடித்திருக்க முடியாது அவன் அதை பயன்படுத்திக்கொண்டான். அவனால் நாம் சொல்வதையெல்லாம் கேட்டு உம் கொட்ட மட்டுமே முடியும். அதை அவன் தவறாமல் செய்வான் இன்றும் என்றும் அவனுக்கு வேறு சக்திகள் இருந்தது இல்லை இது நகைப்புக்குரியதும்ம் கூட. ஆறு வயது மூத்தவள் அவளை என்றோ காண உரிமையுடன் வந்திருக்கலாம் கட்டி அணைத்திருக்கலாம் அழுது புலம்பிருக்கலாம் கடைசியிலும் கூட ஒரு முத்தத்துடன் அவன் நாலு வார்த்தை பேசவே வந்திருக்கிறான் நசை. அதுவே அதுவே அவனால் முடிந்ததும் அனைவருக்கும் தேவைப்படுவதும். ஒரு வேளை அந்த குச்சி கைகால்கள் என்றுமே நாம் பார்க்க முடியாதபடி நம் கூடவே இருக்கின்றதோ. ஆனால் எப்படியும் அவன் அக்காவைக்காண புதருக்குள் இருந்து வராமல் இருக்க முடியாதல்லவா?

சிலுவை மலை மீது:

அவன் படு பயங்கராமான உச்சியில் நின்றுகொண்டு கைவிரித்து அழைகிறான். அங்கு அவனா இன்றும் எரிந்து கொண்டிருக்கிறான். கைகளில் பொன் மண்டையோடுகளுடன் அவள் அந்த கிழவனை அழைக்கிறாள். அந்த நெற்றிச்சிலுவைகள் கிழவன் ஊர் மக்களுக்கு போட்டதா. அந்த இருவரும் ஆதாமும் ஏவாளுமா , கிழவனை பாம்பின் நாக்கிற்கு தீனிபோட அழத்தனரா?.உச்சிக்கு போவதற்குள் கிழவன் செத்துவிடலாம். ஆனால் அவன் அந்த வானவில்லையும் பார்த்து விடுகிறான். அதுதான் அவனை பீதியடையச்செய்கிறது. அதன் காரணம் அவனுக்கும் எனக்கும் விழங்கவில்லை. ஒன்று மட்டும் புரிகிறது அவன் மேலே சென்றும் எரிந்து கொண்டே இருக்கிறான். அப்படியனால் உச்சிக்கு மேல் ஏதும் இல்லையல்லவா ?

No comments:

Post a Comment