Saturday 15 December 2018

கனவு போல : 12/14/2018


ஜன்னலோ கதவோ என்று தெரியாது ஓரளவுக்கு ஞயாபகம் இருப்பது அதுதான் , இல்லை செரி தான் அது கதவுதான் அதன் அருகில் சப்பணங்கால் இட்டு அமர்ந்து வெள்ளை நிற தட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எதனை ? அது கேள்விக்குரியது. சூரியன் மறையும் அந்தி வேளை நான் ஒரு நிக்கரும் அரைக்கை வெள்ளை சட்டையும் அணிந்திருந்தேன். சுற்றிலும் யாரும் இல்லை அது ஒரு சிறிய ஆனால் தூய்மையான் ஆறை. ஆள் உயரத்திற்கு என் வாயிலிரிந்து முடி வந்தது எடுக்க எடுக்க வந்துகொண்டேயிருந்தது ஆனால் அது முடிக்கற்றை அல்ல ஒற்றை முடி.. கடைசியில் அது வந்து தீர்ந்தது. என் இடுப்புக்கு பின்னால் இருபுறமும் தரையில் பெரிய நகங்களுடன் இரு பெரிய கால்கள் தெரிந்தன நான் அதனை பார்ப்பதை தவிர்க்க நினைத்தேன். நான் பார்ப்பது அதற்கு தெரியாமல் பார்த்து விட்டிருந்தேன் இல்லை அவ்வாறு நினைத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என் முதுகு சிலிர்க்க முடிக்கற்றைகள் உரசுவதை உணர்ந்தேன். ஏளனச்சிரிப்புடன் பருத்த முலை அசைய கையில் குழந்தையுடன் அவள் என் முன்னாலேயே வந்துவிட்டாள் என்னால் எழுந்து ஓட முடியவில்லை. வியர்க்க எழுந்து கொண்டதும் நினைத்துக்கொண்டென். நீலியையும் என் அண்ணனையும் ஜெயமோகனையும். வாயின் ஓரம் வழிந்திருந்த  எச்சியை துடைத்துக்கொண்டு மீண்டும் புரண்டு படுத்தேன். அந்த பச்சை கண்கள்!

No comments:

Post a Comment