Wednesday 25 December 2019

ஏன் பிறந்தாய்


ஒருவன் கேட்டான் , பைத்தியம் பிடித்த பிசாசே என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றாய் , எதற்கு எங்கள் கண் முன்னே வந்து இப்படி தொங்கிக்கொண்டிருக்கின்றாய்

இன்னொருவன் கேட்டான் , நாங்கள் கேட்டது கையில் கொஞ்சம் சக்கரம் அது தருவதற்கு வக்கில்லை

மற்றொருவன் கேட்டான் , நாங்கள் கேட்டதோ பிணி நீங்கி சிறு சோறு அதற்கும் வக்கில்லை

அருகில் ஒருவன் கேட்டான் , இப்பொழுதாவது அன்புள்ள பிணங்களை எழுப்பி விட மாட்டாயா

பின்னாலிருந்து ஒருவன் கேட்டான் , இனி அவர் திரும்ப வந்து தேவராஜ்ஜியத்தை துவக்குவாறா , செரி நாம் துவக்குவோம்

மாக்டலீன் பதறி ஓடினாள் , தான் அவனின் வாய்மொழியில் கேட்டதை கூற

அம்மா அவன் காதுகளை பொத்திக்கொண்டு , அவன் இனியாவது தூங்க ஆனந்தத்தில்  தாலாட்டு பாடிக்கொண்டிருந்தாள்.

கண்ணே நீ நிம்மதியாய் உறங்கு!

Saturday 21 December 2019

எதற்கும்

நண்பர்களே என்னை நம்பாதீர்கள் அதற்கு பாத்திரமானவன் இல்லை நான்.
சகோதரனே என்னைப்பற்றி நீ என்ன நினைகின்றாய் ?
குழந்தைகளே நீங்கள் பிறக்காமல் இருந்திருக்கலாமே ?
ஈசல் மக்களே என்னை காணுற்றவனாக ஆக்கிவிட மாட்டீர்களா ?
அன்னையே என்னைத்தேடாதே நான் உனைவிட்டு விலகி வந்து நாட்கள் ஆகின்றன.
மனைவிவே நீ என்னைப்போலவே இருந்துவிடு.
காலமே சற்றும் ஓவ்வெடுக்காமல் சீக்கிரம் முடிந்து விட மாட்டாயா ?