Wednesday 25 December 2019

ஏன் பிறந்தாய்


ஒருவன் கேட்டான் , பைத்தியம் பிடித்த பிசாசே என்ன நினைத்துக்கொண்டிருக்கின்றாய் , எதற்கு எங்கள் கண் முன்னே வந்து இப்படி தொங்கிக்கொண்டிருக்கின்றாய்

இன்னொருவன் கேட்டான் , நாங்கள் கேட்டது கையில் கொஞ்சம் சக்கரம் அது தருவதற்கு வக்கில்லை

மற்றொருவன் கேட்டான் , நாங்கள் கேட்டதோ பிணி நீங்கி சிறு சோறு அதற்கும் வக்கில்லை

அருகில் ஒருவன் கேட்டான் , இப்பொழுதாவது அன்புள்ள பிணங்களை எழுப்பி விட மாட்டாயா

பின்னாலிருந்து ஒருவன் கேட்டான் , இனி அவர் திரும்ப வந்து தேவராஜ்ஜியத்தை துவக்குவாறா , செரி நாம் துவக்குவோம்

மாக்டலீன் பதறி ஓடினாள் , தான் அவனின் வாய்மொழியில் கேட்டதை கூற

அம்மா அவன் காதுகளை பொத்திக்கொண்டு , அவன் இனியாவது தூங்க ஆனந்தத்தில்  தாலாட்டு பாடிக்கொண்டிருந்தாள்.

கண்ணே நீ நிம்மதியாய் உறங்கு!

No comments:

Post a Comment