Wednesday 1 January 2020

பயம்

நான் பயப்படுவது வேப்பமரத்து பேய்களுக்கோ

முருங்கைமரத்து பிசாசுகளுக்கோ

இன்னபிற வேதாளங்களுக்கோ அல்ல ,

புராதான நகரங்களில் முதிர்ந்த மனிதர்களின் முகங்களின் ,

வெம்மை பொங்கும்  கண்களையே
அடைத்து சீறும் தன் மூச்சுகளையே
அவர்களின் தளர் நடைகளையே.

பார்க்காதபடி சென்றாலும் கனவுகளிலும் அவை என்னை அச்சுறுத்துகின்றன.

No comments:

Post a Comment