Monday 20 January 2020

பத்மவியூகம் : வாசிப்பு அனுபவம்

பதம்வியூகம் சிறுகதை : https://www.jeyamohan.in/43970#.XiYjH8hKhPY

போர் இரைக்காக காத்திருக்கும் ஒரு சிலந்தி வலை போன்றது அதனை உருவாக்குவது ஒரு தனிச்சிலந்தியல்ல. அதில் சிக்கிக்கொள்ளும் அனைத்தும் அதன் வீரியமோ அதன் தன்மைகளோ அதன் முடிவிலா சுழற்சியோ ஏதும் தெரியாமல் அதனுள் முயங்கிக்கொண்டே இருக்கின்றன. அத்தனை அழிவுக்குப்பின்னும் எரிந்துகொண்டேயிருப்பது அன்னைகளின் அடிவயிற்று நெருப்பு மட்டுமே அதற்கு பதில் சொல்ல முடியாத கையறு நிலையிலேயே விதி நம்மை வைத்திருகின்றது.

போரின் விளக்கங்களற்ற தொடக்கமும் முடிவையும் பற்றி கதை பேசுகிறது.
பெரும் விதவைகளை உருவாக்கிவிட்ட குருசேத்திரத்தின் பிறகு நீர்க்கடன் கொடுக்கின்றனர். அங்கு வரும் ஒரு அன்னையின் விழி வழி கதை நகர்கிறது. சுபத்திரை , அவள் யார் ? போரின் பொருட்டு கவர்ந்து வரப்பட்ட ஒரு சாதாரண பெண். ஆனால் அவளுள் மோகம் துவண்டெளவே அவள் அர்ச்சுனனுடன் வந்தாள். ஆனால் அவள் முதலாமத்தவள் இல்லை என்று தெரிந்ததும் அதன் அத்தனை ஆற்றலும் அடங்கி அந்த கணமே அவனின் பயத்தை அவனின் உடல் மட்டுமேயான காமத்தை என்ணி அவள் வெறுக்க ஆரம்பித்து விட்டாள். அது கங்கை கரையிலேயே தொடங்குகிறது.

அவள் மகன் இறந்து விட்டான் , ஆனால் தன்னால் அழ முடியாது. தான் ஒரு மகாராணி , அழுவதற்கு தகுதியானவள் இல்லை. அவளின் முகமுடி திறக்கா தருணங்களே அதிகம். அவள் அண்ணனிடமும் வியாசனிடமும் தான் அவள் திறந்து உடைகிறாள். அர்ச்சுனனிடம் ஒரு போதும் இல்லை.

விஷ்ணுபுரம் நாவலில் சங்கர்ஷணன் கூறும் அதே வார்த்தைகளை சுபத்ரையும் கூறுகிறாள். அந்த இறப்பு ஒரு நடக்கா சம்பவமாக இருவரும் உணர முற்படுகின்றனர். அந்த கனவிற்குள் உலாவ அவர்களால் முடியும். ஆனால் அது ஒரு கணம் மட்டுமே அதன் பிறகு அந்த வாள் அவள்கள் வயிற்றில் பாய்ந்து துளாவும்.

அன்னைகள் தங்கள் மகனுக்கு மட்டுமே அன்னைகளாக வாழ முற்படுகின்றனர். திரௌபதியின் மகன்கள் இறந்தலில் சுபத்ரையின் வயிறு குளிரவும் செய்கிறது. அர்ச்சுனனிடன் திரௌபதியின் மகங்கள் இறந்ததை குத்திக்காட்டி அவளால் இம்சையின் இச்சையை அதிகப்படுத்தவும் முடிகிறது. அவளுக்குள் இருக்கும் பேரன்னையை உணர்த்த கிருஷ்ணனின் பேச்சு அவளுக்கு தேவைப்படவே செய்கிறது. அதன் பிறகே அவள் திரௌபதியின் விரிகுழல் கோலத்தை கண்டதும் மனம் பதைக்கிறாள்
உள்ளூர அவள் வேண்டியது என்றுமே தன் அண்ணனின் கனிவுடன் கூடிய வாழ்க்கையின் விரிவைத்தான். அதன் மூலம் அவன் தன்னைத்தானே சாகடிக்காமல் இருப்பது போல அவளாலும் இருக்க முடியும் என்ற நம்பிக்கையை அவளுக்கு கொடுக்கின்றது.

சிறு மனித மனம் என்றுமே தான் எதிர்பார்த்தது நடக்கும் படி பிரபஞ்சத்திடன் கைகூப்பி வேண்டுகிறது. ஆனால் அதுவோ நான் நீ கூறும் எதற்கும் கட்டுப்படாதவன். என் எல்லை எனக்கே தெரியாது என்று இரக்கத்துடன் பார்க்கின்றது

பத்மத்தினுள் இருக்கும் இரு புழுக்களை பார்க்கையில் முதலில் அவள் தன்னை மறந்து அபிமன்யுவின் கடந்த காலத்தில் திளைக்கிறாள். பின்பு தன் வஞ்சத்தை அவனுள் திணிக்கப்பார்கிறாள் இறுதியில் அவள் பத்மவியூகதை விளக்கிக்கூறுவதற்குள் அது மூடியும்விடுகிறது.

எதும் நம் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்று தேற்றியவாறே தன் அழும் தங்கையை அழாதே என்று கூட்டிச்செல்கிறான்.

கங்கைக்கரையில் தொடங்கிய அபிமன்யுவின் வாழ்வு அதிலேயே மீண்டும் முடிந்து தொடங்குகிறது. தன்னால் ஏதும் செய்ய முடியாத கங்கையன்னை இரக்கமுடன் கருணையுடன் ஊழி தோறும் தன் மதலைகளுக்கு முலைகொடுத்து அணைத்துச்செல்கிறாள்.

No comments:

Post a Comment