காலம் அவன் அக்குளுக்குள் அடங்கிவிட்டது
அந்த மேசையின் மீது இருந்த சக்கரம் அவன் மீது ஏறி இறங்கி கூழாக்கி அவனுக்கே காட்டியது
ஆனால் ஆட்ட மேசையின் அடியில் இருந்த அவன் போன்ற ஒரு உருவம் அவனை மீண்டும் அழைத்து உயிர்பெற்று எழச்செய்தது.
சட்டைப்பையில் இருந்த கடைசி கூல்டினும் கிழித்துக்கொண்டு பறந்தோட மீண்டும் சக்கரம் சுழல ஆரம்பித்தது.
மீண்டும் அதே தற்செயல் எனும் மந்திரப்பாய் விரித்து மேகங்களுக்கு மேலே பறக்கலானான். கோடிக்கு அடுத்த முறையும் புதுக்குழந்தை முலைஅருந்துவது போலவே இருந்தது.
சக்கரத்தின் மையப்புள்ளியில் உட்கார்ந்து பந்தினை உற்று நோக்கும்போது தினமும் குத்தும் அதே ஊசி மூளையில் குத்தியது "பார்க்கலாம் அது எதன் அடிப்படையில் தான் சுழல்கிறது" .
No comments:
Post a Comment