Saturday 26 January 2019

துயரம் எனும் உருண்டை

துயரம் தன் மொத்த உருவத்தையும் உருண்டையாக்கி உட்புகுந்துவிட்டது.
தன்னைத்தானே துயரம் என்று அறியாத அத்துயரம் உள்ளே குலுங்கிக்கொண்டிருந்தது.
ஒரு நாள் உள்ளிருந்து அத்துயரம் கால் நீட்டி வெளியே வந்தது.
ஏதும் எட்ட முடியாததொரு உயரத்திற்கு சென்று திரும்பும் தைரியம் இருந்தது அதற்கு.
சாத்தானின் கைவசம் கையளிக்கப்பட்ட அத்துயரம் கைநீட்டி அனைவரையும் அழைத்தது.
கைகொடுக்க ஒன்றும் இல்லாத சமயத்தில் பாழாய்ப்போன மலை உச்சியில் ஒன்றுமில்லாமல் தொங்கியது.
அத்துயரத்தின் நிழல் ஆதி துயரத்தின் மேல் விழுந்து எழுந்தது.
உட்புகுந்த துயரத்தை மீண்டும் தாங்கிக்கொண்டு மலையடிவாரத்தை நோக்கி நடந்தாள்





No comments:

Post a Comment