Sunday 3 February 2019

கழுத்துப்பட்டி

Joyeetajoyart (Instagram)
கனவுகள் என்றுமே நாம் நினைத்தைப்போல் இப்படி சொல்லலாம் நாம் எதிர்பார்ப்பது போல் இருப்பதில்லை.
சொர்க்க வாசலில் இருவரும் கைக்கோர்த்து நடப்பது போலவோ தனித்த சாலையில் இரு பக்கங்களிலும் மரங்கள் நடுவே நடப்பது போலவோ நான் எதிர்பார்த்திருந்தேன் ஆனால் நடந்தது என்னவோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். 
என் வீட்டில் அவள் தூணில் சாய்ந்து கையில் தட்டுடன் சம்மணம்போட்டு உட்கார்ந்து  கீரையோ என்னவோ நறுக்கிக்கொண்டிருந்தாள் உள்ளாடையுடன். அதே பச்சை மேல் சட்டை. 
கருத்த தடித்த அழகிய தொடைகள் அதில் தளும்புகளுடன் வெண்புள்ளிகள் நடுக்காட்டில் சமவெளியில் முளைத்த புற்களின் பசுமையுடன் இருந்தது. மும்முரமாக டிவி பார்த்துக்கொண்டே அவளின் கைகள் முயங்கிக்கொண்டிருந்தது. தோளில் உள்ளாடையின் பட்டி தெரிந்தது அதை மூட அவள் நினைக்கவில்லை. 
ஆனால் என் முழு சிந்தனையும் அதிலேயேதான் இருந்தது என்பது மறுநாள் எழுந்ததும் எனக்கு நன்றாகவே தெரிந்தது.

No comments:

Post a Comment