Thursday 7 February 2019

சோப்பு நுரை

விளங்காத வார்த்தைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றேன் என்றுமே கிடைக்காததொரு பதிலைத்தேடி.

நான் எங்கும் இருக்கும் உயிர் தானா இல்லை உயிரே அற்ற ஜடப்பொருளா?.

அடங்காப்பேர் இருப்புடன் அலையும் நான் வெறும் சொற்குவியலில் கிடக்கும் கசக்கி எறியப்பட்ட காலி பைதானோ?

ஒன்று மட்டும் மிகத்தெளிவாக உள்ளது என்னதான் பேசி கிழித்தாலும் வெறும் சோப்பு நுரை தான் உச்சந்தலையினுள் உள்ளது , அதுவே நிதர்சனம்.


No comments:

Post a Comment