Sunday 19 April 2020

பட்டம்

இளித்த பற்கள்
ஓங்கிய வன்கைகள்
உமிழ்ந்த எச்சில்
தடம் பதிக்கும் செருப்புகள்
உறிஞ்சியெடுத்த செல்வ மூட்டை
கறைபிடித்த கைகள்
இறுக்க மூடிய இமைகள்
தீரா இரவுகள்
என்றுமே முளைக்காத கிளைகள்
வெம்மை துப்பும் மணல்வெளி
சாபம் நீரா சிலுவை
இவற்றுடன் பிள்ளை எனும் பட்டம் பேருக்குப்பின்னால்

இப்படிக்கு
பத்மநாபபிள்ளை



No comments:

Post a Comment