Sunday 12 April 2020

முகங்கள்


இறந்தவர்களின் முகங்கள் மேகங்களில் அலைகின்றன
ஒன்றுவிடாமல்
சிரித்தும் அழுதும் கர்ஜித்தும் தவித்தும் வெட்கியும்
ஒன்று காட்டி இன்னொன்றாய் பின் மறைகின்றன
கைக்குள் அகப்படும் பஞ்சுபோன்ற அவை
பூதாகாரமாய் தலைமேல் நிற்கும் விண்வெளியாய் அவை
ஆனால் அதிலும் விசித்திரம்
ஒருமுறை கண்ட செத்தவரை மீண்டும் காணயியலாது
அவ்வளவுபேரையும் கொண்டுள்ளது அல்லவா களங்கள்!

No comments:

Post a Comment