Wednesday 25 August 2021

கர்த்தரின் தொரட்டிக்கம்பு


அவன் அங்கே தனியாக நிற்க வேண்டிய கட்டாயம்


நின்றான் கையில் தொரட்டிக்கம்புடன்


அதன் எடை தாங்காமல் விழுந்துவிடுபவனைப்போல


சுற்றி நின்ற ஆடுகள் அவனை கண்டுகொள்ளாமல் மேய்ந்தலைந்தன


கேட்காத ஆடுகளை மிரட்டி கம்பை சுழற்றினான்


கால்களுக்கு கீழே கருத்த மண்ணில் வெக்கை நீரென வழிந்தது 


கரிசலின் சூடு தாங்காமல் "யம்மோ யம்மோ" என்று கஷ்டக் குதியாளமிட்டான்


தூரத்து மொட்டை குன்றின் மீதிருந்து வந்தது குரல்


"உனக்கு எதுக்கு தொரட்டிக்கம்பு"


அழ நினைத்த அவன் முகம் அப்படியே தங்கி நின்றது

No comments:

Post a Comment