Friday 14 February 2020

சட்டப்பூர்வ வலசை

குனிந்த தலையுடன் ,
உடைந்த சிறகுடன்  ,
சிதைந்த நாசியுடன் ,
கண்கட்டி விடப்பட்ட புறாக்கள் தினமும் இங்கு வலசை வருகின்றன.

முகமூடியுடன் அலையும் அவை , மகிழ்ச்சியுடன் இருக்கின்றன.
அவற்றில் மிகவும் அலாதியாவை குட்டிப்பறவைகள்

அங்கொரு கட்டிடத்தின் வாசல் முன் ஒரே ரொட்டித்துண்டை கவ்வியவடி நூறு நூறு புறாக்கள்  வானை மறைத்து பேரோலம் எழுப்பின.

அதில் ஒன்று ,

"இந்தமுறை ஒரு  வருடத்திற்கு அனுமதி தந்து விட்டான் புண்ணியவான்" என்று முகச்சுருக்கம் மேலும் சுருங்கிச்சிரிக்க கடந்து சென்றது.

சட்டப்பூர்வமான வலசை என்றானதின் சிரிப்பு.

No comments:

Post a Comment