Friday 30 March 2018

வாழ்நாளுக்கும்


கடற்கரை நண்டாய் ஒரு நாள். 
நடுக்காட்டில் ஊளையிடும் நரியாய் ஒரு நாள்.
மணல் தேறிக்கும் பாலை வெளியிலே ஊரும் பாம்பாய் ஒரு நாள்.
காற்றை கிழிக்கும் சிறகுடன் ஒரு நாள்.
பிணங்களின் எலும்பை சுற்றிலும் வாலாட்டி ஒரு நாள்.
சோற்று மூட்டை தூக்கும் எறும்பாய் ஒரு நாள்.
தீராது போலும் நிறுத்திக்கொள்வோம் பட்டியல் நீள்கிறது வாழ்நாளுக்கும்.

No comments:

Post a Comment