Friday 30 March 2018

நம்பமுடியாத கனவு


அந்த நடு இரவில் சைபீரிய பனி ஓலக்காற்றுடன் சுழன்றடித்துக்கொண்டிருந்தது.இலைலகளில்லாத மரங்கள் அந்த ஒற்றையடி பாதையின் இருமருகிலும் நெடுக வளர்ந்திருந்தது. கையில் ஊசலாடும் தீபத்துடன் ஒழுகும் மெழுகுவர்த்தியை பாதுகாப்பாய் பிடித்தவாறு  அந்த ஒற்றையடிப்பாதையின் முடிவில் இருந்த ஒரு பழைய வீட்டை நோக்கி பனியில் கால் புதைய மெதுவாக நடந்து கொண்டிருந்தான்.அழுக்கடைந்த மேல் அங்கியும் வெளிறிப்போன உள்சட்டையும் அணிந்திருந்த அவனின் சாம்பல் நிற தாடி மார்பை தாண்டி வளர்ந்திருந்தது. அந்த வெளிச்சத்திலும் அவன் கண்கண் எதையோ தேடியவாறு அங்கும் இங்கும் அலைபாய்ந்தது.முன்னொரு காலத்தில் கடவுளால் பிரசவிக்கப்பட்ட வீடு இப்போது சபிக்கப்பட்டு சுவர் பெயர்ந்து அதில் புழுக்கள் நெளிந்த வண்ணம் இருந்தன. அவன் வீட்டின் அருகே வந்ததும் புழுக்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தை கண்டு விரிசலுக்குள் பாய்ந்தன ஆனால் விரிசலினுள் அவை சிரிக்கும் சத்தம் அவனுக்கு நன்றாகவே கேட்டது அவனும் பயத்தில் கையில் இருந்த வேட்காவை வாயில் சிறிது திணித்திக்கொண்டான் தாடியில் அவை சிந்தி துளிகளாய் வழிந்தன.வீட்டினுள் நுழைந்தவன் கையில் இருந்த கொஞ்சநஞ்ச வெளிச்சத்தால் வீட்டின் உள் வெளியை சுற்றிப்பார்த்தான். இருட்டில் நிறைய உருவங்கள் அவனுக்கு தெரிந்தன. அழுதுகொண்டு,சிரிந்துக்கொண்டு,ஓலமிட்டுக்கொண்டும், கை கால்களில் விலங்குகளுடன், இருண்ட மூலைகளைப்பார்த்து திட்டிக்கொண்டும் ஆனால் எல்லாம் அரைமுகங்களுடனும் சிதைந்த முகங்களுடனும் இருந்தன. திடீரென அனைத்து பிண்டங்களும் கத்தி அழுதவாறு அவனைச்சூழுந்துகொண்டன.கையில் இருந்த மெழுகுவத்தியை வீட்டின் கூரையைப்பார்த்து தூக்கிப்பிடிக்க ஒழியைப்பிடிக்க அனைத்து உருவங்களும் முண்டியடித்தன.கூரை வெடித்து சிதற இருண்ட வானில்  ஒரே ஒரு நட்சத்திரம் மின்னி மின்னி மறைந்தது.மீண்டும் அந்த உருவங்கள் தங்கள் இடங்களுக்கே சென்று அண்டிக்கொண்டன. சிறிது நேரம் கைகளை இறக்காமல் அந்த நட்சத்திரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன் கையை இறக்கி அவன் முகந்தின் அருகே வைத்தான். எதிரே இருந்த நிலைக்கண்ணாடியில் அவனின் முகமும் சிதைந்திருந்தது தெரிந்தது

No comments:

Post a Comment