சொல்வனம் இதழில் பிரசுரமாகிய சிறுகதை : புனித வெள்ளி
Monday, 28 September 2020
Sunday, 13 September 2020
பறவையில்லை
மலைகள் சிறுத்து குறுகி நின்றன
நான் மேலே பறக்கையில்
நதிகள் வெருண்டு தன் கோட்டு நீருக்குள் ஒளிந்தன
நான் மேலே பறக்கையில்
சிதறிய பொம்மைகளேன கட்டிடங்கள் ஆவென்றன
நான் மேலே பறக்கையில்
ஆனால் தரையிறங்கி வந்தாகவேண்டும்
இறக்கைகள் சுருக்காமல்
மெங்காலடியெடுத்து வைக்காமல்
இறங்கி நிற்கையில் முன்புபோல் அவையில்லை
தற்பொழுது என் தலைக்குமேல் பறக்கும் குருவிக்கு மட்டுமே தெரியும்
அவற்றின் என்றுமுள உருவம்
நமக்கு வாய்த்தது இவ்வளவுதான்
பாவம் நான் பறவையில்லையே!
Friday, 11 September 2020
முரட்டு மகிழ்ச்சி
சுழலும் பைக்கின் நடுவாய் முழுநிலா
அடுத்த நொடி தேய்ந்தடங்க தாமதமின்றி
வலி உருக்கிட குறுகியோடும் பின்மண்டை குருதி
அதில் முகர்ந்தலையும் வண்ணத்துப்பூச்சி
மொட்டைத்தலை வருடும் மென்காற்று
அவன் குருதி நக்கும் அவன் வளர்ப்பு நாய்
கிடப்பவனை அவனே பார்க்க
நாயும் அவனும் குருதிச்சிதற விசும்பளந்தாட
முற்றிலும் முரட்டு மகிழ்ச்சி
Tuesday, 1 September 2020
Subscribe to:
Posts (Atom)