விட்டில் பூச்சி ஒன்று தவழ்ந்து வந்து சாலை ஓரத்து விளக்கை
தலை தூக்கி எட்டி பார்க்கின்றது.பல பூச்சிகள் பறந்தபடி இருக்க தன் சிறகை மெல்ல
அசைத்து சிறகடித்து பறக்கின்றது விளக்கை நேக்கி.
மழை பெய்து ஓய்ந்த அந்த பின் இரவில் காற்றில் ஈரப்பதம்
நிறைந்திருக்க கருப்பு நிற சாலை மஞ்சள் விளக்கொளியில் தங்க குளம் போல காட்சியளித்தது. வாகனங்கள்
ஸ்ப்தமின்றி வழியும் நீரின் சப்தமே மேலோங்கியிருந்தத்து. வேகமாக வந்த ஒரு
இரு சக்கர வாகனம் இடரி குளத்தில் வழுக்கி செல்ல இராக்கோழிச்சப்தமும் ஈசலின்
சிறகடிப்பும் தவிர எதும் அதை அறிந்திருக்கவில்லை.மஞ்சளில் சிவப்பு
ரத்தம் ஊர்ந்து சென்றது.
வானம் பார்த்த படி இருந்த டீகடை பாய்லரில் ஆவி பரலோகம்
பார்த்து சென்றுகொண்டிருந்த்து. பக்கத்தில்
இருந்த 25 வயது
மதிக்கத்தக்க வாலிபன் டீ கிளாசில் வாய் வைத்து உரிஞ்சியபடி “நல்லவந்தா ஆனா
பொண்ணு விசயத்துல கொஞ்சம் வீக்கு கேட்டியா எனக்கு தெரிஞ்சே மூணு” என்று எதிரில்
இருந்தவனை பார்த்து கண்ணடித்திக்கொண்டான்
“இன்னு எத்தனயோ” அவன்
மறுமொழி அளித்தான். இருவரும்
வாய்விட்டு சிரித்துக்கொண்டனர். தாழ்ந்த கூரையுடைய
அந்த டீகடையின் உள்சென்று காசு கொடுத்து வெளியே வந்தனர். “அஜீ….அஜீ…..” என்று
ஒப்பாரியும் சங்கும் கலந்து ஒரு அமானுசிய ஓசை கேட்டு இருவரும் பின்னால் இருந்த
அந்த இடுப்புயர வாசல் கொண்ட சிறிய வீட்டை நோக்கி திரும்பினர். பாடை
தயாராகிக்கொண்டிருந்தது.
“திடீர்னு என்னடே சத்தம் ஓவரா கிடக்கு“என்றான்
ஒருவன்
“அறுத்து
கொண்டுவந்துட்டானுங்க மாப்ள”
“அதையும்
அறுத்துருப்பானுகளோ” இருவரும்
வீட்டிற்கு வந்திருந்த பிணடத்தை
எதையோ தேடுவதைப்போல பார்த்தபடி ஒருவருக்கொருவர் சிரித்துக்கொண்டனர் “செரி வண்டிய எடு” “அப்பனோட
புள்ளையும் சேந்துட்டானே சண்டாளெ” என்ற
முணுமுணுப்பு எங்கேயோ கேட்ட்து.டீகடை ஆவியுடன் அவன் ஆன்மாவும் பரலோகம் சென்று
சேர்ந்திருக்கலாம்.
பேய்க்காற்றில் விட்டில் பூச்சியின் இறகுகள் உதிர ஆரம்பித்தன.
முழுப்போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த கிழவன்
சுக்குனூறாகிப்போன வண்டியயையும் ரத்தம் ஊறி விழுந்து கிடந்தவனின் கூழாகிப்போன
தலையையும் வெறித்து பார்த்தபடி தன் அழுக்கு படிந்த சாறத்தால் முகத்தில்
வழிந்திருந்த வியர்வையை துடைத்துகொண்டான். சட்டை
இல்லாத மேலுடம்பும் சிக்குப்பிடித்த தலையுடன் இருந்த அவன் சாலையில் கிடந்தவனின்
அருகில் குத்தவைத்து அமர்ந்துகொண்டான். வெகுநேரம்
அமைதியாக இருந்த அவன் திடீரென்று மிருகஓலத்துடன் அழ ஆரம்பித்தான் “ஏம் புள்ள ஏம்
புள்ள” என்று
அரற்றியவாறே கீழே கிடந்தவனை எடுத்து நெஞ்சில் எடுத்து வைத்து அணைத்துக்கொண்டான். அவன் முழு
உடம்பும் அழுவது போல இருந்த்து. ஒக்கரித்து
வாந்தி எடுத்து அப்படியே ரோட்டில் வேரறுந்த மரம் போல சாய்ந்தான். ஈசலின் இறகு
ஒன்று காற்றில் தவழ்ந்து வந்து சாலை நீரில் விழுந்த்து.
அழுது அழுது தூங்கிப்போனவள் வெளியில் காகங்கள் கூக்குரலிட
விளித்தெழுந்தாள். அந்த
இருண்ட வீட்டின் ஒரு மூலையில் படுத்திருந்த அவள் எதிரில் இருந்த அந்த ஒற்றை
விளக்கின் சுடர் ஆட்டம் மகனின் உருவத்தை நிழலாக்கி காட்டின. காகங்கள்
மீண்டும் அலற திடுக்கிட்டு எழுந்தாள். சேலை
விழுந்து பின்னால் வால் போல தொற்றி வர தலை விரிகோலமாய் வெளியில் பருத்த முலை தொங்க
வந்தவள் காகங்களை பார்த்து சிரித்தாள். அதில்
ஒன்று அவள் முலையில் மோதி கையில் வந்து அமர்த்து. பின்னால் அவள் வீட்டில் காக்கைகளுடன் பேசும் ஒலி மட்டுமே
கேட்டதாக பேசிக்கொண்டனர்.
“Guys tell
me about death” விசாலமான அந்த வகுப்பறையில் அந்த பேராசிரியர் சிறிது
கத்தியவாறே அந்த வாக்கியத்தை சொல்லி முடித்தார், “ஞானிகள் என்ன சொல்றாங்கன்னா சாவுங்கறது ஒரு திறப்பு, அது ஒத்ததுதா
என்னோடதும். ஒரு முடிவு இல்ல அது ஒரு தொடக்கமே அப்டிங்குறது . தெரியாத விசங்கள
நம்ம வாழ்கைல தெரிஞ்சுக்கிட்டே வற்றோம் அதே போலதான் நமக்கு தெரியாத சாவுங்கறது ஒரு
விசயம் அத தெரிஞ்சுக்க போறொம்” என்று
எழுந்து நின்று தீர்க்கமாக பதிலளித்து முடித்த ஒரு கடைசி இருக்கை மாணவன் “அஜி எங்கடா” என்று பக்கத்தில்
இருந்தவனிடம் கேட்டவாறே உட்கார்ந்தான். “Death
is not a thing to have fear, it’s just a fact. We have to face it and accept it
nothing can stop it. It’s nature so why should we think against it” என்று
முதல் இருக்கை மாணவி சொல்லி முடித்தாள். இருவரும் பேசி முடித்த பின் பேராசிரியர்
என்ன சொல்லபோகிறார் என்று மாணவர்கள் அனைவரும் அவர் பக்கம் திரும்பினர். "சாவ
நேர்ல யாராச்சும் பாத்த்ருக்கீங்களா?" வகுப்பறை
கடிகாரம் கூட அமைதி காத்தது. பேராசிரியர் தொடர்ந்தார் "அந்த உயிர் போற வலி
உடல் இறுகி ஒண்ணுமே செய்ய முடியாம போகும் போது கடவுள் எப்படியாவது காப்பாத்திர
மாட்டானாங்குற கண்ணுல தெரியுற ஒரு ஏக்கம். கடைசி நம்பிக்கை கடைசி கோபம் காமம்
செய்ய முடியாத விசயங்களொட வலி இப்படி எல்லாம் அடியழத்துல புதஞ்சு கெடக்குற அந்த
பாழடஞ்ச பழுபேறிய கண்கள பார்த்ததுக்கீங்களா? அவரின்
கைகள் நடுங்க ஆரம்பித்தன நிறுத்தி நிறுத்தி மூச்சுவாங்கியபடியே
பேசிக்கொண்டிருந்தார் பதற்றம் அவரை முழுதாய் ஆட்கொண்டது. "சிதைல அவங்கள
குப்புற போட்டு மண்ண போடும் போது வாய் மூக்குல மண்ணு போக பல்லிளிச்சு கெடக்கும்
போது நம்மள பாத்து சிரிக்கும். இந்த உலகத்துல ஒரு இருப்பு இல்லாம போகும் போது அது
ஒரு இழப்பு இல்லயா? அத
எப்படி ஏத்துக்கிறது?" இவ்வாறு
ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென்று குழந்தை போல
கேவி கேவி அழ ஆரம்பித்தார்இருக்கையில் அம்ர்ந்து உள்ளங்கையில் முகத்தை தாங்கி
பிடித்தபடி. . "oh God why this happened to him
ajiiiii…….” என்று விசும்பினார். பதற்றம்
மாணவர்களையும் பற்றிக்கொண்டது.
பிண்டத்தின் எலும்புகள் புடைத்து எழும்ப ஆள் அரவமற்ற அந்த
சுடுகாட்டில் கஞ்சி குடித்துக்கொண்டிருந்த அவன் சட்டியை கீழே வைத்து விட்டு நான்கு
அடி கம்பால் அடித்து பிண்டத்தை உறங்கவைத்தான். காலையில் காடாத்துக்கு வந்த சில்லறையுடன் கருத்த அந்த
நெற்றிக்காசயும் எடுத்து திருப்பி திருப்பி பார்த்தபடி சிரித்தான் நெற்றியில்லாத
அந்த பிண்டத்தை நினைத்து.
மூன்று ஸ்மிர்ன்ஆப் வோட்கா குவாட்டர் காலி பாட்டில்கள்
அவர்கள் இருவரும் பேசுவதை செவிமடுத்து கேட்டுக்கொண்டிருந்தன. துணைக்கு ஒரு
பாதி காலியான பாட்டிலும் மதுக்குவளைகழும் வறுத்த ஈரலும் அவைகளை சுற்றுயபடி
ஈக்களும் இருந்தன. மதுக்குவளைகள்
நிரம்பிகாலியாயின. இருவரும்
வோட்காவின் கார நெடியை உணர்ந்தனர், இருவரும்
ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவில்லை.
“செத்தேபோனா” விசும்பல் பொங்க
அடக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தான்.
“காலு அப்படியே பொளந்து பொய் கெடந்துச்சு ஒரே ரத்தம் சுத்தி சுத்தி எல்லாரும்
ஆம்புலன்ஸுக்கு போன் பன்னி கூப்ட்டாங்க..வந்துச்சு
குப்ப காரன் அள்ளுற மாதிரி சாக்குல அள்ளி போட்டு கொண்டு போய்ட்டான்” இன்னொருவன் ஏதும்
பேசாமல் தலைகுனிந்தே இருந்தான். குட்டிபோட்ட
பூனை ஒன்று குட்டிகளை தூக்கிக்கொண்டு பொந்துக்குள் சென்றுகொண்டிருந்த்து.மீண்டும் அவன்
தொடர்ந்தான் “அவனொட
அம்மா….தேடுவாங்கல்ல
பையன் வருவான்னு எதிர்பாத்து சோறு வச்சிட்டு இருப்பாங்க ஆனா மூட்டைல கொண்டுவந்து
பொத்துனு போடுவான். விசும்பலுடன்
சிரித்துக்கொண்டான். ஒரு
எழவும் புரியல அவன் கொஞ்சம் மெதுவா வந்துருக்கலாம் மழ பெய்யாம இருந்துருக்கலாம்
லாரி மெதுவா வந்துருக்கலாம் அவன் சீக்கிரமே போயிருக்கலாம். ஒன்னுமே நடக்கல
துண்டு துண்டா கெடந்தான். இதுக்கு
அந்த அம்மவுக்கு கொழந்தவயே குடுக்காம இருந்துருக்கலாம் இல்ல" என்று இன்னொருத்தனின்
பதிலை எதிர்ப்பார்த்தவாறு திறக்க மறுக்கும் கண்களை திறந்து மேல் கூரையைப்பார்த்து
புளித்த ஏப்பம் ஒன்றை விட்டு ஒக்கரித்தான் "விதி விதி விதி” என்று தேம்பி
தேம்பி அழ ஆரம்பித்தான். வெள்ளை
மேகங்கள் ரத்த மழை பெய்ய ஆரம்பித்தன உலகமே அதில் நனைந்து கொண்டிருந்த்து விதியின்
கண்கள் வானில் ரத்த சிவப்புடன் அவனை நோக்கியது , அருகில் இருந்தவன் கண்விழித்து பார்க்கையில் தாய் பூனை ஒரு
சுண்டெலியை துரத்திப்பிடித்து கொன்று விளையாடிக்கொண்டிருந்தது. சிகரேட் ஒன்றை
பற்றவைத்துக்கொண்டான். அழுது
கொண்டிருந்தவன் இன்நேரம் மனைவியுடன் புணர்ந்து கொண்டிருக்கலாம் என்று நினைத்தவாறு
ஆழ்ந்த புகை ஒன்றை வெளியிட்டான்.
இருண்ட அந்த சிறிய அரசு ஆஸ்பத்திரியின் வாசலில் அவன் ஒரு
உருவமற்ற பிண்டமாய் இருந்தான். பிரம்மாண்டமான
ஆலமரம் ஒன்று விழுதுகளை அசைத்தபடி மழை போல இலைகளை உதிர்த்து விளையாடியது. செத்த இலை ஒன்று
பிண்டத்திற்கு துணையாக பீண்டத்தின் மேல் அமர்ந்தது. “சார் என்னோட டியூடி முடிஞ்சது நா கெளம்பனும் சும்மா டார்ச்சர் பண்ணாதிங்க, எனக்கு வீட்டுல
நெறைய வேல இருக்கு” என்றபடி
ஒட்டமும் நடையுமாக டாக்டர் காரை நோக்கி சென்றார்.
“எனக்கு
மட்டும் வேல இல்லயா சார், என்னோட
கடைசி பஸ்ஸ விட்டுட்டு வந்துருக்கேன், புணத்த
வீட்டுக்கா சார் எடுத்துட்டு போக முடியும், கேஸ்னு
சும்மா அலையலா முடியாது நல்லது பண்லாம்னு வந்து ஆப்ப எடுத்து நானே சொருகிக்க
முடியாது சார்” என்று
கூறிய அவன் வேகமாக இருட்டில் இருட்டானான்.
டாக்டருக்கு வந்த போனை எடுத்து பேசயில் ”அப்பா அம்மா
வயித்துல இருந்து தம்பி பாப்பா அஜீ வந்துட்டாம்பா சின்னதா கைய கால ஆட்டிடே இருக்கா
சீக்கிரம் வா” அந்த
ஆலமரத்தின் கீழ் சிறு புல் அரும்புகள் பனித்துளி தாங்கி வளர்ந்திருந்த்து .விட்டில் பூச்சி
ஒன்று தேங்கியிருந்த நீரில் செத்து மிதந்தது