கலியாணி சிறுகதை : http://www.sirukathaigal.com/குடும்பம்/கலியாணி/
சமகால இலக்கிய வாசகனுக்கு இது ஒரு சாதாரண கைவிடப்படலின் கதையாகவே உணர்த்தப்பட்டுவிடும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் என் பார்வையில் இக்கதை இரு விதங்களில் முக்கியமாக படுகின்றது.
1. விவரிப்பு முறை
இது ஒரு கைடப்படலின் கதையாக இருந்தாலும் அதில் அந்த ஊரின் பல கூறுகள் கதையின் போக்கில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்.
கதைக்கு தேவையானது ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குவது , வாசகனை ஒரு நிகர் வாழ்க்கைக்கு கொண்டு செல்வது. அதற்காகவே இவை இருக்கின்றன. ஆனால் இவை புகுத்தப்பட்டவை அல்ல. இது இந்த ஒரு பத்தி கதைக்கு ஒட்டில்லாமல் இருப்பதாக தோன்றனால் , ஆனால் அதன் மூலமாகவே நான் கதைக்குள் செல்கிறேன். ஒரு சங்ககாலத்தில் குடிகளின் தற்போதைய நிலையை உணர்த்துகிறது.
"கோயில் பூஜை, உபாத்திமைத் தொழில், உஞ்சவிருத்தி என்ற சோம்பற் பயிற்சி – இவைதான் அங்குள்ள பிராமண தர்மத்தின் பிரதிநிதிகளின் வாழ்க்கை இலட்சியம். வேளாண்மை என்ற சோம்பர்த் தொழில் அங்குள்ள பிள்ளைமார்களின் குல தர்மம். மறவர்கள் ஏவின வேலையைச் செய்தல், ஊர்க் காவல் என்ற சில்லறைக் களவு உட்பட்ட சோம்பல் தர்மத்தைக் கடைபிடித்தனர். பறைச்சேரி ஊரின் போக்குடன் கலந்தாலும், அல்லும் பகலும் உழைத்து உழைத்து, குடித்து, பேசிப் பொழுதைக் கழித்தது."
2. சங்ககாலம் முதல் இருக்கும் பெண்ணின் ஆற்றியிருத்தலையும் அதன் நீட்சியையும் காட்டுவது
கல்யாணி ஒரு சாதரண குடும்பத்தின் எழைப்பெண் , எல்லா ஏழைஒபெண்களுக்கும் இருப்பது போலவே அவளுக்கும் கல்யாணத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஆசிரியர் கூறுகிறார் , ஆனால் அவள் அங்கு கவனிக்கப்படவில்லை , அவள் உடல் அங்கு கவனிக்கப்படவில்லை , அவள் காமம் அங்கு கவனிக்கப்படவில்லை. அதுவே எனக்கு கதையில் முக்கிய கூறாக இருக்கின்றது.
தொந்தி பெருத்து கனத்து குடுமி சரிந்து கிடக்கும் சுப்புவையர் மன்மதன் இல்லை. அவளின் காமத்தை ஒரு பொருட்டாக மதிக்காத அவர் மூத்தாளை கல்யாணியுடன் சேர்த்து கூறி அவளின் நிலையை அவர் நொடிக்கொருமுறை நிறுவிக்கொண்டேயிருக்கிறார். ஆனால் அவர் மூத்தாளையும் எந்த அளவுக்கு நடத்தினார் என்பதில் சந்தேகமே. அவர் அவளையும் அப்படியே நடத்தியிருப்பார் என்றே உற்தியாக மனம் எண்ண முயல்கிறது. அவரின் கைப்படலையே அவள் சிலாகிக்கும் அளவுக்கு இருக்கின்றது கல்யாணியின் கையறு காமம்.
காமம் என்பது என்றறியாத ஒருவர் இருக்கும் நிலையில் காமமாகவே உருவானவனாய் வருகிறான் சுந்தர் சர்மா. அவளை அதுவரை வெளிச்சத்தில் பார்க்காத அவள் , வெளிச்சத்தில் கண்டதும் காமுறுகிறான். அவளை எங்கெல்லாமோ கூட்டிச்செல்ல வேண்டும் என்று கனவு காண்கிறான். அதும் காமத்தினாலேயே. வீட்டில் அவன் கல்யாணியை தழுவிச்சென்றபின்பு அவள் அழுகிறாள் , அவளின் கொழுநனுக்கு மோசம் இழத்ததாக வருந்துகிறாள். அதற்காகவே விடியும் முன்பு நதிக்கு குளிக்கச்சென்று வர விளைகிறாள். ஆனால் விதி அவளை அவனுக்கு காட்டுகிறது பின்பு மறுகரையில் ஒரு உருவம் போல அவன் சென்றுவிடுகிறான். ஆனால் அவளின் காமம் அங்கும் தனிமையிலேயே நிற்கின்றது. வேண்டுமானால் அவளுக்கு அங்கு நதிகரையோரமாக ஆலமரத்தின் வேர்ப்புடைப்பில் கோவில் கொண்டுள்ள கன்னியம்மன் துணைக்கு வரலாம். ஆண்கள் வர வாய்ப்பில்லை.
சமகால இலக்கிய வாசகனுக்கு இது ஒரு சாதாரண கைவிடப்படலின் கதையாகவே உணர்த்தப்பட்டுவிடும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் என் பார்வையில் இக்கதை இரு விதங்களில் முக்கியமாக படுகின்றது.
1. விவரிப்பு முறை
இது ஒரு கைடப்படலின் கதையாக இருந்தாலும் அதில் அந்த ஊரின் பல கூறுகள் கதையின் போக்கில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்.
கதைக்கு தேவையானது ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குவது , வாசகனை ஒரு நிகர் வாழ்க்கைக்கு கொண்டு செல்வது. அதற்காகவே இவை இருக்கின்றன. ஆனால் இவை புகுத்தப்பட்டவை அல்ல. இது இந்த ஒரு பத்தி கதைக்கு ஒட்டில்லாமல் இருப்பதாக தோன்றனால் , ஆனால் அதன் மூலமாகவே நான் கதைக்குள் செல்கிறேன். ஒரு சங்ககாலத்தில் குடிகளின் தற்போதைய நிலையை உணர்த்துகிறது.
"கோயில் பூஜை, உபாத்திமைத் தொழில், உஞ்சவிருத்தி என்ற சோம்பற் பயிற்சி – இவைதான் அங்குள்ள பிராமண தர்மத்தின் பிரதிநிதிகளின் வாழ்க்கை இலட்சியம். வேளாண்மை என்ற சோம்பர்த் தொழில் அங்குள்ள பிள்ளைமார்களின் குல தர்மம். மறவர்கள் ஏவின வேலையைச் செய்தல், ஊர்க் காவல் என்ற சில்லறைக் களவு உட்பட்ட சோம்பல் தர்மத்தைக் கடைபிடித்தனர். பறைச்சேரி ஊரின் போக்குடன் கலந்தாலும், அல்லும் பகலும் உழைத்து உழைத்து, குடித்து, பேசிப் பொழுதைக் கழித்தது."
2. சங்ககாலம் முதல் இருக்கும் பெண்ணின் ஆற்றியிருத்தலையும் அதன் நீட்சியையும் காட்டுவது
கல்யாணி ஒரு சாதரண குடும்பத்தின் எழைப்பெண் , எல்லா ஏழைஒபெண்களுக்கும் இருப்பது போலவே அவளுக்கும் கல்யாணத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஆசிரியர் கூறுகிறார் , ஆனால் அவள் அங்கு கவனிக்கப்படவில்லை , அவள் உடல் அங்கு கவனிக்கப்படவில்லை , அவள் காமம் அங்கு கவனிக்கப்படவில்லை. அதுவே எனக்கு கதையில் முக்கிய கூறாக இருக்கின்றது.
தொந்தி பெருத்து கனத்து குடுமி சரிந்து கிடக்கும் சுப்புவையர் மன்மதன் இல்லை. அவளின் காமத்தை ஒரு பொருட்டாக மதிக்காத அவர் மூத்தாளை கல்யாணியுடன் சேர்த்து கூறி அவளின் நிலையை அவர் நொடிக்கொருமுறை நிறுவிக்கொண்டேயிருக்கிறார். ஆனால் அவர் மூத்தாளையும் எந்த அளவுக்கு நடத்தினார் என்பதில் சந்தேகமே. அவர் அவளையும் அப்படியே நடத்தியிருப்பார் என்றே உற்தியாக மனம் எண்ண முயல்கிறது. அவரின் கைப்படலையே அவள் சிலாகிக்கும் அளவுக்கு இருக்கின்றது கல்யாணியின் கையறு காமம்.
காமம் என்பது என்றறியாத ஒருவர் இருக்கும் நிலையில் காமமாகவே உருவானவனாய் வருகிறான் சுந்தர் சர்மா. அவளை அதுவரை வெளிச்சத்தில் பார்க்காத அவள் , வெளிச்சத்தில் கண்டதும் காமுறுகிறான். அவளை எங்கெல்லாமோ கூட்டிச்செல்ல வேண்டும் என்று கனவு காண்கிறான். அதும் காமத்தினாலேயே. வீட்டில் அவன் கல்யாணியை தழுவிச்சென்றபின்பு அவள் அழுகிறாள் , அவளின் கொழுநனுக்கு மோசம் இழத்ததாக வருந்துகிறாள். அதற்காகவே விடியும் முன்பு நதிக்கு குளிக்கச்சென்று வர விளைகிறாள். ஆனால் விதி அவளை அவனுக்கு காட்டுகிறது பின்பு மறுகரையில் ஒரு உருவம் போல அவன் சென்றுவிடுகிறான். ஆனால் அவளின் காமம் அங்கும் தனிமையிலேயே நிற்கின்றது. வேண்டுமானால் அவளுக்கு அங்கு நதிகரையோரமாக ஆலமரத்தின் வேர்ப்புடைப்பில் கோவில் கொண்டுள்ள கன்னியம்மன் துணைக்கு வரலாம். ஆண்கள் வர வாய்ப்பில்லை.