Saturday, 30 March 2019

அலைகள்

அதன் வடிவமற்ற வடிவத்தை நான் கவனிப்பதுண்டு அதனை பகுத்தறிய முனைந்ததுண்டு.

நான் தனிமையில் இருக்கையில் காண்கிறேன் நீரின் மேல் மிதந்து சென்ற அவள் கோடி கால்தடங்களை.

அதன் சிரிஷ்டி கர்த்தா என் நீண்ட பெருமூச்சுகளின் சிறு சலனங்களோ?

Wednesday, 20 March 2019

எதிரே

தட்டையான முழு நிலவின் அடியில் என்ன இருக்கும் என்று நான் துழாவியதுண்டு .
பச்சையும் நீலமும் கலந்த வண்ணம் மெல்லிய சலனத்துடன் அசைந்து கொண்டிருக்கும்.
ஆனால் அதன் அடியில் தான் கரிய இருட்டும் பள்ளிலித்துக்கொண்டிருக்கின்றது.
அதன் வெண்மை நிஜம் தானா ?
இது நகைப்புக்குரியதா ?

ஒற்றை மெழுகுவர்த்தி

ஆம் நாம் இங்கு தனிமையிலே இருக்கின்றோம்.

கோடி தூரம் தாண்டி எங்கோ ஓர் எல்லையில் ஓர் உயிர் நமக்காக எங்காதா என்ற தனிமையின் வெறுமையில்.

ஒவ்வொரு அணுவும் அதற்கே உன்டான தனிமையில் சுழல்கிறது.

என்றும் தனிமையின் குதூகலத்தில் தெரியும் வெண்பந்து இன்று எனக்காவோ இல்லை அதற்காவோ கரிய வானில் ஒற்றை மெழுகுவர்த்தி போல வழிகிறது.